அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க்கில் அமைந்துள்ள "Excelsior College" -இல் இயற்கை அறிவியல் துரையின் இயக்குனராக உள்ள டாக்டர். உஷா பழனிசுவாமி அவர்கள் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகித்துள்ள தாவரங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பினை American Society for Horticultural Science என்ற அமைப்பிற்காக தொகுத்துள்ளார். அதன் காணொளி கீழே...
இந்த தொகுப்பிலிருந்து ஒரு முக்கியமான தகவல் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளின் அளவு வெறும் 2.5%. ஆனால் சீனா 15% ஏற்றுமதி செய்கிறது. ஒரு பெரிய வியாபாரத்தின்அழைப்பாகவே இதை நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் மூலிகைகளை வெறுமனே செடிகளாக ஏற்றுமதி செய்வதா? அல்லது மதிப்பு கூட்டி பின்பு அந்த மதிப்பு கூட்டிய பொருளுக்கு உரிய காப்புரிமை பெற்று பின்பு ஏற்றுமதி செய்வதா?
எதுவானாலும் இயற்கை மருத்துவம் எதிர்கால பெருவியாபாரமாக ஆகப்போவது உறுதி.
Courtesy: http://www.ashs.org/db/horttalks/detail.lasso?id=899
செவ்வாய், 28 ஜூன், 2011
புதன், 18 மே, 2011
வாத்தியார் பிள்ளை மக்கு!
நம் வீட்டின் அருகில் ஒரு வாத்தியார் குடியிருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும். "நான் ஒரு ஸ்கூல்ல வாத்தியார். ஆனா என் பையன் நீ! இப்பிடி மக்கா இருக்கியேடா!" என்று. (வாத்தியார் பேச்சிலரா இருந்தா கூடவா? என்று குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது!)
பிள்ளை பெற்றுக்கொள்வதில் இருந்து அவனை /அவளை டீன் ஏஜ் வரை வளர்ப்பது என்ற கடமையை (சிவனே/பெருமாளே/... என்று) ஏற்றுக்கொண்டு இந்தியத் தாய்மார்களும் தந்தைமார்களும் கஷ்டப்படுவதை நாள்தோறும் பார்க்கிறோம்!
ஒரு பிள்ளை பெற்றவன் என்ற முறையில் என்னை நானே சோதித்து பார்த்து கண்ட உண்மை ஒன்று, இல்லை இல்லை, என் கேள்விக்கு நானே கண்ட பதில். அது என்ன கேள்வி? சிறு வயதில் நான் செய்த சில தவறுகளுக்காக (தப்புகள் இல்லை) என் அப்பா என்னை தண்டிக்கும்போது, நான் அப்படி என்ன செய்யக்கூடாததை செய்துவிட்டேன்? என்ற கேள்வி மனதில் எழும், விழும். மறுபடி என்றாவது எழும். இந்தக் கேள்விக்கு விடை சொல்ல ஒரு அப்பரும் (அப்பனும்) தயாராய் இல்லை (நானே அப்பவாகிதான் இதை கண்டுபிடிக்கணும்னு இருக்கு!)
நான் வளரும்போது எண்ணங்களால் உந்தப்பட்டு என்னென்ன செய்தேனோ அதையே என் மகனும் செய்யும் போது என் தந்தையைப்போல் எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக, என் கேள்விகளுக்கு விடை தெரியும் காலம் வந்துவிட்டதாய் உணர்ந்தேன். என் தாய் கற்றுக்கொடுத்த நிதானம்தான் அதற்கு காரணம்.
தன்னைப்பற்றி அறிந்துகொள்ள கேட்கப்படும் நிறைய கேள்விகளுக்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்ற உபரி உண்மையும் எனக்கு அப்போது தெளிவாகியது.
ஒரு உயிர் உருவாவதிலிருந்தே அதன் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் (genes) என்று சொல்வார்களே, அது உருவாகும் நிமிடம், உருவாக்குபவர் என்ன மனநிலையில்/உடல்நிலையில் உள்ளார் என்பதை பொறுத்து அமையும்.
'முதல் இரவு' நடப்பதற்காக செய்யும் சாங்கியங்களில் (இன்று நடப்பதை சொல்லவில்லை, எவ்வாறு நடக்க வேண்டும் என்று எழுதிவைக்கப்பட்டதோ (யாரால்!), அவ்வாறான சாங்கியங்களில்) அதற்கான விளக்கங்களை நாம் அறிய முடியும்.
ஒரு மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் தயார் செய்யும் முறையில் மஞ்சள், சந்தானம், ஜவ்வாது, பன்னீர், சில பூக்கள், மற்றும் பல இயற்கை பொருட்களை வைத்து அலங்கரித்தப்பின்தான் அந்த முக்கியமான (!) வேலையை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் அரும்பாடு பட்டாலும் ஆரம்பத்திலிருந்தே நடப்பதெல்லாம் ஏடாகூடம்தான்.
இக்கணத்தில் எனக்கு தோன்றுவது "சொல்லித்தெரிவதுதான் மன்மதக்கலை". "காமசூத்ரா" எனும் இந்தியப்படம் ஒன்று! பார்த்தப்பின்தான் தெரிந்தது நம் நாட்டு கலாச்சாரம் எந்த அளவிற்கு நுண்ணியது என்று. இந்திய இலக்கியங்களில் பலவற்றிலும், குறிப்பாக அகநானூறில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏராளமான அக சமாச்சாரங்கள் ஒளிந்துள்ளன.
குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதிலிருந்து அதைப்பெற்றுக்கொண்டு பேணி(!) வளர்த்து சமுதாயத்திற்கு ஒரு நல்ல பிள்ளையை உருவாகுவது இன்றைய அவசரகால வாழ்க்கை முறையில் காலவதியாகிவிட்டது.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததிலிருந்து தன்னுடைய தேடலை/கற்றலை ஆரம்பித்துவிடுகிறது. எங்கிருந்து? அதன் கண்முன் நடக்கும் அத்தனையும் பார்த்து, காதார கேட்கும் எல்லாவற்றிலுமிருந்து!
பிறந்தவுடன் அனேக(!) குழந்தைகளுக்கு வீடுதான் உலகம். அந்த உலகத்தில் ஆரம்பமாகும் கல்வி தொடர்ந்து தான் சந்திக்கின்ற எல்லா மனிதர்களின் ஊடே பயணித்து தன் வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்கிறது. பெற்றோர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என்ன படிப்பு படித்திருந்தாலும், எந்த அந்தஸ்தில் இருந்தாலும் தன குழந்தையின் முதல் கல்விக்கு அவர்களே பொறுப்பு.
வாத்தியார் பள்ளியில் மட்டும் வாத்தியாராய் (!) இருக்காமல் வீட்டிலும் அதே நினைப்போடு வாத்தியார்(?) தொழில் செய்வதனால்தான் அவர் பிள்ளை மக்காய் வளர்கிறது. கண்டிப்பு என்ற சொல்லிற்கு இன்னும் நம் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் சரியான அர்த்தத்தையோ விளக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை.
சரியான கல்வி மட்டுமே ஒருவனின்/ஒருத்தியின் நிஜ வாழ்க்கை (அதாவது தாமே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வாழ்வது) எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். பிள்ளைகளை, உலகம் என்னவென்று அறிந்துகொள்ளச்செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் யார் என்பதை சிறிதளவேனும் அறிந்துகொள்ளுங்கள். உங்களின் பிம்பம்தான் பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாம் சரியான பாதையில் நடைபோட்டால் நம் பின்னே வரும் பிள்ளைகள் சரியான பாதையில்தான் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
பிள்ளை பெற்றுக்கொள்வதில் இருந்து அவனை /அவளை டீன் ஏஜ் வரை வளர்ப்பது என்ற கடமையை (சிவனே/பெருமாளே/... என்று) ஏற்றுக்கொண்டு இந்தியத் தாய்மார்களும் தந்தைமார்களும் கஷ்டப்படுவதை நாள்தோறும் பார்க்கிறோம்!
ஒரு பிள்ளை பெற்றவன் என்ற முறையில் என்னை நானே சோதித்து பார்த்து கண்ட உண்மை ஒன்று, இல்லை இல்லை, என் கேள்விக்கு நானே கண்ட பதில். அது என்ன கேள்வி? சிறு வயதில் நான் செய்த சில தவறுகளுக்காக (தப்புகள் இல்லை) என் அப்பா என்னை தண்டிக்கும்போது, நான் அப்படி என்ன செய்யக்கூடாததை செய்துவிட்டேன்? என்ற கேள்வி மனதில் எழும், விழும். மறுபடி என்றாவது எழும். இந்தக் கேள்விக்கு விடை சொல்ல ஒரு அப்பரும் (அப்பனும்) தயாராய் இல்லை (நானே அப்பவாகிதான் இதை கண்டுபிடிக்கணும்னு இருக்கு!)
நான் வளரும்போது எண்ணங்களால் உந்தப்பட்டு என்னென்ன செய்தேனோ அதையே என் மகனும் செய்யும் போது என் தந்தையைப்போல் எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக, என் கேள்விகளுக்கு விடை தெரியும் காலம் வந்துவிட்டதாய் உணர்ந்தேன். என் தாய் கற்றுக்கொடுத்த நிதானம்தான் அதற்கு காரணம்.
தன்னைப்பற்றி அறிந்துகொள்ள கேட்கப்படும் நிறைய கேள்விகளுக்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்ற உபரி உண்மையும் எனக்கு அப்போது தெளிவாகியது.
ஒரு உயிர் உருவாவதிலிருந்தே அதன் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் (genes) என்று சொல்வார்களே, அது உருவாகும் நிமிடம், உருவாக்குபவர் என்ன மனநிலையில்/உடல்நிலையில் உள்ளார் என்பதை பொறுத்து அமையும்.
'முதல் இரவு' நடப்பதற்காக செய்யும் சாங்கியங்களில் (இன்று நடப்பதை சொல்லவில்லை, எவ்வாறு நடக்க வேண்டும் என்று எழுதிவைக்கப்பட்டதோ (யாரால்!), அவ்வாறான சாங்கியங்களில்) அதற்கான விளக்கங்களை நாம் அறிய முடியும்.
ஒரு மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் தயார் செய்யும் முறையில் மஞ்சள், சந்தானம், ஜவ்வாது, பன்னீர், சில பூக்கள், மற்றும் பல இயற்கை பொருட்களை வைத்து அலங்கரித்தப்பின்தான் அந்த முக்கியமான (!) வேலையை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் அரும்பாடு பட்டாலும் ஆரம்பத்திலிருந்தே நடப்பதெல்லாம் ஏடாகூடம்தான்.
இக்கணத்தில் எனக்கு தோன்றுவது "சொல்லித்தெரிவதுதான் மன்மதக்கலை". "காமசூத்ரா" எனும் இந்தியப்படம் ஒன்று! பார்த்தப்பின்தான் தெரிந்தது நம் நாட்டு கலாச்சாரம் எந்த அளவிற்கு நுண்ணியது என்று. இந்திய இலக்கியங்களில் பலவற்றிலும், குறிப்பாக அகநானூறில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏராளமான அக சமாச்சாரங்கள் ஒளிந்துள்ளன.
குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதிலிருந்து அதைப்பெற்றுக்கொண்டு பேணி(!) வளர்த்து சமுதாயத்திற்கு ஒரு நல்ல பிள்ளையை உருவாகுவது இன்றைய அவசரகால வாழ்க்கை முறையில் காலவதியாகிவிட்டது.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததிலிருந்து தன்னுடைய தேடலை/கற்றலை ஆரம்பித்துவிடுகிறது. எங்கிருந்து? அதன் கண்முன் நடக்கும் அத்தனையும் பார்த்து, காதார கேட்கும் எல்லாவற்றிலுமிருந்து!
பிறந்தவுடன் அனேக(!) குழந்தைகளுக்கு வீடுதான் உலகம். அந்த உலகத்தில் ஆரம்பமாகும் கல்வி தொடர்ந்து தான் சந்திக்கின்ற எல்லா மனிதர்களின் ஊடே பயணித்து தன் வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்கிறது. பெற்றோர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என்ன படிப்பு படித்திருந்தாலும், எந்த அந்தஸ்தில் இருந்தாலும் தன குழந்தையின் முதல் கல்விக்கு அவர்களே பொறுப்பு.
வாத்தியார் பள்ளியில் மட்டும் வாத்தியாராய் (!) இருக்காமல் வீட்டிலும் அதே நினைப்போடு வாத்தியார்(?) தொழில் செய்வதனால்தான் அவர் பிள்ளை மக்காய் வளர்கிறது. கண்டிப்பு என்ற சொல்லிற்கு இன்னும் நம் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் சரியான அர்த்தத்தையோ விளக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை.
சரியான கல்வி மட்டுமே ஒருவனின்/ஒருத்தியின் நிஜ வாழ்க்கை (அதாவது தாமே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வாழ்வது) எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். பிள்ளைகளை, உலகம் என்னவென்று அறிந்துகொள்ளச்செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் யார் என்பதை சிறிதளவேனும் அறிந்துகொள்ளுங்கள். உங்களின் பிம்பம்தான் பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாம் சரியான பாதையில் நடைபோட்டால் நம் பின்னே வரும் பிள்ளைகள் சரியான பாதையில்தான் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
வெள்ளி, 7 ஜனவரி, 2011
செவ்வாய், 30 நவம்பர், 2010
உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!
உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!
எதோ தத்துவம் சொலராப்பல இருக்குது.
அது ஒன்னியும் இல்ல வாத்தியாரே!
அல்லாரும் பொறந்தநாள் கொண்டார்ரங்க. பொறந்த நாளே தெரியாதவன் இன்னா நாள் கொண்டாடுவான்? அப்போ அவன் வயசு இன்னான்னு ஆருக்காச்சும் தெரியுமா?
ஆனா மனசு கீதே, அதுக்கு இன்னா வயசாவுதுன்னு சுளுவா கண்டுக்கலாம். ஒவ்வொரு மனசனும் அவன் வாழ்ற எடத்துல ஒரு பொறுப்போட நடந்துகிட்டான்னா அவன சாதாரண மனுசன்னு சொல்லலாம். கொஞ்சம் சின்ன புள்ள மாதிரி பண்ணான்னா, அவன லூசுன்னு சொல்லிக்கலாம். அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.
சொல்றது ஒன்னு செய்யறது ஒண்ணுன்னு இருந்தா, பெரிய மனுசன்னு சொல்லலாம். எதையுமே சொல்லாம வெறுமனே அவன்பாட்டுக்கு எதோ பண்ணிகினு இருன்தான்னா, இன்னா சொல்றது.. நமக்கு தெரியிலியேபா?
ஞானின்னு சொல்லலாமா?
இப்பிடி மனசுக்கு வயச நாம கண்டுக்கிறது ரொம்ப ஈசிதான? இன்னா சொல்ற?
எதோ தத்துவம் சொலராப்பல இருக்குது.
அது ஒன்னியும் இல்ல வாத்தியாரே!
அல்லாரும் பொறந்தநாள் கொண்டார்ரங்க. பொறந்த நாளே தெரியாதவன் இன்னா நாள் கொண்டாடுவான்? அப்போ அவன் வயசு இன்னான்னு ஆருக்காச்சும் தெரியுமா?
ஆனா மனசு கீதே, அதுக்கு இன்னா வயசாவுதுன்னு சுளுவா கண்டுக்கலாம். ஒவ்வொரு மனசனும் அவன் வாழ்ற எடத்துல ஒரு பொறுப்போட நடந்துகிட்டான்னா அவன சாதாரண மனுசன்னு சொல்லலாம். கொஞ்சம் சின்ன புள்ள மாதிரி பண்ணான்னா, அவன லூசுன்னு சொல்லிக்கலாம். அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.
சொல்றது ஒன்னு செய்யறது ஒண்ணுன்னு இருந்தா, பெரிய மனுசன்னு சொல்லலாம். எதையுமே சொல்லாம வெறுமனே அவன்பாட்டுக்கு எதோ பண்ணிகினு இருன்தான்னா, இன்னா சொல்றது.. நமக்கு தெரியிலியேபா?
ஞானின்னு சொல்லலாமா?
இப்பிடி மனசுக்கு வயச நாம கண்டுக்கிறது ரொம்ப ஈசிதான? இன்னா சொல்ற?
லேபிள்கள்:
மனோதத்துவம்
திங்கள், 29 நவம்பர், 2010
நல்லகண்ணு பரமசிவம் - 1
"என்னதான் உலகமோ? என்ன பண்ணினாலும் குத்தம் கண்டுபுடிக்குது!" என்று புலம்பிக்கொண்டே ஆபீஸ் உள்ளே நுழைந்தார் நல்லகண்ணு.
வாய்யா நல்ல்ல்ல கண்ணு! ஏன் வரும்போதே புலம்பல்..வீட்டுக்காரம்மா காலையிலேயே நல்ல்ல்ல ஊத்தப்பம் குடுத்துச்சா....என்று நக்கலாக கேட்டார் பரமசிவம்.
போய்யா...உனக்கு எப்பவுமே நக்கல்தான். ஆனா நீ மட்டும் எப்பிடி சந்தோசமா இருக்கே. உனக்கும் நாலு பொண்ணு இருக்குது. நாலும் படிக்குது..கல்யாணம் பண்ணனும்..பொண்ண பெத்தவன் பாடு சொல்லி தெரியவேண்டியதில்ல...
இது பத்தாதுன்னு கூட பொறந்த 3 தம்பி 2 தங்கச்சிக்கு கல்யாணம் வேற பண்ணிட்ட..உனக்கு சம்பளமும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழின்னு சாக்கு சொல்லாம, நீ சந்தோசமா இருக்கிற ரகசியத்த கொஞ்சம் சொல்லுப்பா..என்று ஒரு பெரிய விடைக்கான கேள்வியை சாதாரனமாய் கேட்டார் நல்லகண்ணு.
"நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ ஏன் பொலம்பிகிட்டே வந்தேன்னு மொதல்ல சொல்லு" என்றார் பரமசிவம்.
நான் சொல்லறத என்பசங்க கேக்க மாட்றாங்க. ஆனா யாரோ ஒரு பஸ் கண்டக்டர் சொல்றத நான் கேக்கணுமாம்?
ரொம்ப இழுக்காம விஷயத்தை சொல்லுய்யா?
நேத்து பஸ்சுல வரும்போது நம்ம ஆபீஸ் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு கொஞ்சம் மெதுவா ஏறினேன்.."வயசான காலத்துல யாருக்கு சொத்து சேக்க இப்பிடி அலையிற?" ன்னு கேக்குறான்.
இன்னைக்கு காலையில் வரும்போது "சில்லறை இல்லாம பஸ்ல எதுக்கு வர? " ன்னு சத்தம் போடுறான். நான் என்ன பண்ணினாலும் குத்தமாவே பாக்குறான். என்ன பண்றதுனே தெரியல!
பரமசிவம் தன்னுடைய குரலை சற்று சரிபடுத்திக்கொண்டு, பதில் சொல்லஆரம்பித்தார்.
ஒரு சூழ்நிலைக்குள்ள யோசிச்சுதான் நாம எந்த விஷயத்தையும் புரிஞ்சுக்கவோ இல்ல முடிவு எடுக்கவோ செய்யுறோம். சூழ்நிலை தாண்டி சிலர் யோசிச்சு சொல்லுவாங்க. அவங்க அதிபுத்திசாலிங்க. நமக்கு அதெல்லாம் வேணாம். ஒரு விஷயத்தை செய்யரதுக்கோ இல்ல ஒரு பிரச்சினைய தீக்கரதுக்கோ ரெண்டு மூணு வழி இருக்கும். மத்தவங்கல பாதிக்காம எத செய்ய முடியுமோ அதை நாம செய்யணும். சில நேரங்கள்ல அது கொஞ்சம் சிரமமான வேலையா இருந்தாலும் பால்மாறாம செய்யணும். அப்பிடி செய்யும்போது நமக்கு ஒரு வேலைய நல்லபடியா முடிச்சுட்டோங்கர திருப்தி இருக்கும். மனசுல திருப்தி இருந்தா நக்கல் இல்லாம வேற என்ன வரும்...
நல்லகண்ணு சற்றே தெளிந்தவராய் அவரோட சீட்டுக்கு போனார்.
(நக்கல் என்பதை தமாஷ் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவும்)
வாய்யா நல்ல்ல்ல கண்ணு! ஏன் வரும்போதே புலம்பல்..வீட்டுக்காரம்மா காலையிலேயே நல்ல்ல்ல ஊத்தப்பம் குடுத்துச்சா....என்று நக்கலாக கேட்டார் பரமசிவம்.
போய்யா...உனக்கு எப்பவுமே நக்கல்தான். ஆனா நீ மட்டும் எப்பிடி சந்தோசமா இருக்கே. உனக்கும் நாலு பொண்ணு இருக்குது. நாலும் படிக்குது..கல்யாணம் பண்ணனும்..பொண்ண பெத்தவன் பாடு சொல்லி தெரியவேண்டியதில்ல...
இது பத்தாதுன்னு கூட பொறந்த 3 தம்பி 2 தங்கச்சிக்கு கல்யாணம் வேற பண்ணிட்ட..உனக்கு சம்பளமும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழின்னு சாக்கு சொல்லாம, நீ சந்தோசமா இருக்கிற ரகசியத்த கொஞ்சம் சொல்லுப்பா..என்று ஒரு பெரிய விடைக்கான கேள்வியை சாதாரனமாய் கேட்டார் நல்லகண்ணு.
"நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ ஏன் பொலம்பிகிட்டே வந்தேன்னு மொதல்ல சொல்லு" என்றார் பரமசிவம்.
நான் சொல்லறத என்பசங்க கேக்க மாட்றாங்க. ஆனா யாரோ ஒரு பஸ் கண்டக்டர் சொல்றத நான் கேக்கணுமாம்?
ரொம்ப இழுக்காம விஷயத்தை சொல்லுய்யா?
நேத்து பஸ்சுல வரும்போது நம்ம ஆபீஸ் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு கொஞ்சம் மெதுவா ஏறினேன்.."வயசான காலத்துல யாருக்கு சொத்து சேக்க இப்பிடி அலையிற?" ன்னு கேக்குறான்.
இன்னைக்கு காலையில் வரும்போது "சில்லறை இல்லாம பஸ்ல எதுக்கு வர? " ன்னு சத்தம் போடுறான். நான் என்ன பண்ணினாலும் குத்தமாவே பாக்குறான். என்ன பண்றதுனே தெரியல!
பரமசிவம் தன்னுடைய குரலை சற்று சரிபடுத்திக்கொண்டு, பதில் சொல்லஆரம்பித்தார்.
ஒரு சூழ்நிலைக்குள்ள யோசிச்சுதான் நாம எந்த விஷயத்தையும் புரிஞ்சுக்கவோ இல்ல முடிவு எடுக்கவோ செய்யுறோம். சூழ்நிலை தாண்டி சிலர் யோசிச்சு சொல்லுவாங்க. அவங்க அதிபுத்திசாலிங்க. நமக்கு அதெல்லாம் வேணாம். ஒரு விஷயத்தை செய்யரதுக்கோ இல்ல ஒரு பிரச்சினைய தீக்கரதுக்கோ ரெண்டு மூணு வழி இருக்கும். மத்தவங்கல பாதிக்காம எத செய்ய முடியுமோ அதை நாம செய்யணும். சில நேரங்கள்ல அது கொஞ்சம் சிரமமான வேலையா இருந்தாலும் பால்மாறாம செய்யணும். அப்பிடி செய்யும்போது நமக்கு ஒரு வேலைய நல்லபடியா முடிச்சுட்டோங்கர திருப்தி இருக்கும். மனசுல திருப்தி இருந்தா நக்கல் இல்லாம வேற என்ன வரும்...
நல்லகண்ணு சற்றே தெளிந்தவராய் அவரோட சீட்டுக்கு போனார்.
(நக்கல் என்பதை தமாஷ் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவும்)
லேபிள்கள்:
நல்லகண்ணு பரமசிவம்
சனி, 2 அக்டோபர், 2010
சில புரிதல்கள்
நேற்று என் நண்பனோடு நான் பேசிக்கொண்டிருக்கும்போது தோன்றிய ஒரு விஷயம். (கவிதை வடிவில் - ஒரு சிறு முயற்சி - பிழை இருந்தால் பின்னூட்டமிடவும்)
என் மொழி
என் மொழியே அல்ல
எவர் மொழியோ
என் மொழி
உன் மொழியாகலாம்
உன் மொழி
என் மொழியாகலாம்!
எனினும்,
என் வழி என்றுமே
என் வழிதான்.
அதிகபட்சமாக சினிமாத் துறையில் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். "என் கதையை திருடிவிட்டார்கள். என் கற்பனை எனக்கு மட்டுமே சொந்தமானது" என்று.
நாம் பிறக்கும்போது சில அடிப்படை செயல்களான உண்பது, அழுவது இன்ன பிற போன்றவற்றிற்கான புரிதல்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும் (அனாடமி). ஆனால் நாம் சிந்திக்கும் எல்லாமே நாமே சுயமாக செய்வதாக நினைத்திருந்தால் அங்கே ஒரு பிழை ஏற்படுகிறது. நம் சிந்தனையில் வெளிப்படும் விஷயங்கள், இந்த சமுதாயம் தந்தது. நம்மை சுற்றி உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிரற்றவைகளுக்கும் அந்தச் சிந்தனையில் பங்கு இருக்கிறது.
சிந்திப்பதன் மூலம் செயல் உருவாகிறது. ஒரு செயல் மற்றொரு சிந்தனைக்கோ செயலுக்கோ விதையாக அமைகிறது. Stimuli and Response என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
சரி இன்னாதான் விஷயம், என்று கேட்பவர்களுக்கு, ஒரு பதில். ஏற்கெனெவே சொன்ன உதாரனத்தை வைத்தே சொல்கிறேன். ஒருவருடைய கதை மற்றொருவருடைய கதையாகலாம். ஆனால், திரைக்கதை ஒருவருக்கே சொந்தம் அல்லது ஒரு குழுவுக்கே சொந்தம். இதை யாரும் மறுக்க முடியாது.
மறுப்பவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
என் மொழி
என் மொழியே அல்ல
எவர் மொழியோ
என் மொழி
உன் மொழியாகலாம்
உன் மொழி
என் மொழியாகலாம்!
எனினும்,
என் வழி என்றுமே
என் வழிதான்.
அதிகபட்சமாக சினிமாத் துறையில் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். "என் கதையை திருடிவிட்டார்கள். என் கற்பனை எனக்கு மட்டுமே சொந்தமானது" என்று.
நாம் பிறக்கும்போது சில அடிப்படை செயல்களான உண்பது, அழுவது இன்ன பிற போன்றவற்றிற்கான புரிதல்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும் (அனாடமி). ஆனால் நாம் சிந்திக்கும் எல்லாமே நாமே சுயமாக செய்வதாக நினைத்திருந்தால் அங்கே ஒரு பிழை ஏற்படுகிறது. நம் சிந்தனையில் வெளிப்படும் விஷயங்கள், இந்த சமுதாயம் தந்தது. நம்மை சுற்றி உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிரற்றவைகளுக்கும் அந்தச் சிந்தனையில் பங்கு இருக்கிறது.
சிந்திப்பதன் மூலம் செயல் உருவாகிறது. ஒரு செயல் மற்றொரு சிந்தனைக்கோ செயலுக்கோ விதையாக அமைகிறது. Stimuli and Response என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
சரி இன்னாதான் விஷயம், என்று கேட்பவர்களுக்கு, ஒரு பதில். ஏற்கெனெவே சொன்ன உதாரனத்தை வைத்தே சொல்கிறேன். ஒருவருடைய கதை மற்றொருவருடைய கதையாகலாம். ஆனால், திரைக்கதை ஒருவருக்கே சொந்தம் அல்லது ஒரு குழுவுக்கே சொந்தம். இதை யாரும் மறுக்க முடியாது.
மறுப்பவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
மனம் ஒரு தோட்டம்
முதலில் கொஞ்சம் தாவரங்களின் வரலாறு. தாவரங்களின் வகைகள் சுமார் 4 லட்சம். அத்தனையும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் பெருவாரியான பிரிவினைகளை நாம் அறிவியல் பாடங்கள் மூலம் அறிந்துள்ளோம். மலர்ச்செடிகள், காய் மற்றும் கனி தரும் செடிகள், பலனே அல்லாத செடிகள். இன்னொரு வகை உள்ளது. அது உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் சில தாவரங்கள், முட்செடி போன்று.
முட்செடிகளை வெட்டி எரி(றி)யுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை நான் பார்க்க நேர்ந்தது. ஊரெல்லாம் உள்ள முட்செடிகளை வெட்டுவது மிக சுலபம். ஒரு சின்ன அறிவிப்பு போதும். ஆனால் நம் மனம் என்னும் தோட்டத்தில் பல முட்செடிகளை வளர்த்து வருகிறோம், நமக்கே தெரியாமல். தெரியாமல் வளர்த்தது நம் தவறில்லை என்றாலும், முற்றிலும் வளர்ந்து நம்மையே அழிக்கும் வரை நாம் அதை அறியாமலே இருப்பதுதான் மிகக்கொடியது.
அந்த முட்கள் வளரும்போது நம்மிடம் சில மாற்றங்கள் தென்படும். கோபம், வெறுப்பு, பொறாமை, தலைவலி, வருத்தம், சொந்தம் மற்றும் நட்பில் விரிசல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
எல்லாம் சேர்ந்து தென்படுமேயானால் உங்களை யார் காப்பாற்றுவது?
மனத்தோட்டத்தில் முட்களை வெட்டிவிட்டு மலர்ச்செடிகளை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
வற்புறுத்தியோ அதிகாரம் செய்தோ எதையும் சாதிக்க முடியாது. வேறு எந்த குறுக்கு வழியிலும் முடியாது. இறைநம்பிக்கையும் வழிபாடும் மட்டுமே நல்வாழ்க்கைக்கு வழி செய்யும். ஆன்மிகம் என்பது இவ்வாறு உருவானதுதான்.
வழிபாடும் தியானமும் முட்செடிகளை களைந்து மலர்ச்செடிகளை வளர்க்க உதவும்.
இன்று மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டிருக்கும். வழிபடுங்கள். வாழுங்கள்.
முட்செடிகளை வெட்டி எரி(றி)யுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை நான் பார்க்க நேர்ந்தது. ஊரெல்லாம் உள்ள முட்செடிகளை வெட்டுவது மிக சுலபம். ஒரு சின்ன அறிவிப்பு போதும். ஆனால் நம் மனம் என்னும் தோட்டத்தில் பல முட்செடிகளை வளர்த்து வருகிறோம், நமக்கே தெரியாமல். தெரியாமல் வளர்த்தது நம் தவறில்லை என்றாலும், முற்றிலும் வளர்ந்து நம்மையே அழிக்கும் வரை நாம் அதை அறியாமலே இருப்பதுதான் மிகக்கொடியது.
அந்த முட்கள் வளரும்போது நம்மிடம் சில மாற்றங்கள் தென்படும். கோபம், வெறுப்பு, பொறாமை, தலைவலி, வருத்தம், சொந்தம் மற்றும் நட்பில் விரிசல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
எல்லாம் சேர்ந்து தென்படுமேயானால் உங்களை யார் காப்பாற்றுவது?
மனத்தோட்டத்தில் முட்களை வெட்டிவிட்டு மலர்ச்செடிகளை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
வற்புறுத்தியோ அதிகாரம் செய்தோ எதையும் சாதிக்க முடியாது. வேறு எந்த குறுக்கு வழியிலும் முடியாது. இறைநம்பிக்கையும் வழிபாடும் மட்டுமே நல்வாழ்க்கைக்கு வழி செய்யும். ஆன்மிகம் என்பது இவ்வாறு உருவானதுதான்.
வழிபாடும் தியானமும் முட்செடிகளை களைந்து மலர்ச்செடிகளை வளர்க்க உதவும்.
இன்று மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டிருக்கும். வழிபடுங்கள். வாழுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

