திங்கள், 18 ஜனவரி, 2016

Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்


Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்.
*************************************
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பொதுமக்கள் எல்லோரும் விதிவிலக்கின்றி பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்டில் சேமிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும் ஒரே திட்டம் இதுதான். குறைந்தபட்சம் ₹.500 முதல் லிமிட் இருக்கும்வரை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
திருமணம் மற்றும் மேற்படிப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக இது இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பதினைத்து வருடம் லாக் பீரியட் இருக்கும் இந்த அக்கௌன்ட்டில் நிலையான ரிடர்ன்ஸ் கிடைக்கும். வருடா வருடம் நிதிநிலை தாக்கல் செய்யப்படும்போது பி.பி.எஃப்.க்கான வட்டி விகிதம் அறிவிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி, வருடத்திற்கு ஒன்னரை லட்ச ரூபாய் வரை பி.பி.எஃப்.ல் சேமிக்கலாம்.
கொசுறு:
--------------
வருடத்திற்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதை மே மாதத்தில் முடிவுசெய்து ஜூன் இறுதிக்குள் பி.பி.எஃப்.ல் மொத்தப் பணத்தையும் போடுவதால் அதிக வட்டி பெற முடியும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அப்துல் ரஷீத்

பள்ளிகூடத்துக்கு போய் பாடம் படிக்குறது ஒரு வகை... எல்லாருக்கும் சின்ன வயசுல(!) அனேகமா அது நடந்திருக்கும்...

பள்ளிக்கூட படிப்பு ஏதோ புரிஞ்சும் புரியாமையும் ஒரு வழியா முடிஞ்சிடும். படிப்பு முடிச்ச கையோட வேலைக்கு போடா(டி)ன்னு அனுப்பிருவாங்க.

கண்ண கட்டி காட்டுல விட்டாக்கூட பரவால்ல... காய், பழம் எல்லாம் சாப்பிட்டு ஏதோ ஒரு தெசையில வாழ்க்கைய ஓட்டிரலாம்... கடல்ல விட்டா எப்படிங்க பெரியவங்களே???

"ஒலகம் தெரியாம இருக்கான் எப்படித்தான் பொழைக்கப் போறானோ??" அப்படின்னு பொலம்பிட்டு விட்டுட்டா போதுமா? ஒங்க அனுபவத்த கொஞ்சம் சொன்னா அத வச்சு பொழப்போமே!!! அப்படின்னு நெனைக்குற இளசுகளுக்குதான் பொஸ்தகம் இருக்குது...

"படிப்பே ஏறலன்னுதான் வேலைக்கு வந்தோம்... இங்க வந்ததுக்கு அப்புறமும் படிக்கனும்னா, அட போப்பா..." - இப்படி செல பேரு! அவுங்களுக்கு அனுபவம் யார் தெரியுமா?? தெனமும் பாக்குற எல்லா மனுசங்களும்தான்.

அப்துல் ரஷீத் - ஆட்டோ டிரைவர். கூடுவாஞ்சேரில வாடகை வீட்ல வாழுற, குடும்ப கடன்களை முடித்துவிட்ட, தமிழ்நாடு போக்குவரத்துள வேலை செஞ்சி ஒய்வு வாங்குன, எண்பத்து நாலு வயசுக்காரர்.

தெனமும் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற மாமரத்து பிள்ளையார் கோவில்தான் அவருக்கு சர்வ அடைக்கலம். அங்கு வந்தால் அவருக்கு எந்த நாள்லயும் எந்த நேரத்துலயும் சவாரி கெடைக்குதாம்...

இன்னைக்கு கெடைச்ச அனுபவம். - தொடரும்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

உத்திராயணம்




உத்திராயணம் 2015 வீடியோ விளக்கம்பாலு சரவண சர்மாபழைய தாம்பரம் கிராம புரோகிதர் & ஜோதிடர் ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Posted by Tambaram Jothidar BaluSaravanan on 22 December 2015

வியாழன், 22 அக்டோபர், 2015

கடலை!



மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிய
அரியவாம் கடலை போடுதல்

என்றாலும், வேர்கடலை வாயில் போடுதல் அவ்வளவு அரிதில்லை! வறுத்தோ அவித்தோ ஒவ்வொரு நாளும் ஐம்பது கிராம் வீதம் சாப்பிடலாம். அதில் கொழுப்பு அதிகம் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள்.. அது சரிதான்... ஆனால் சக்கரையைப் பற்றி பல குழப்ப கருத்துகள் இருப்பதுபோல் இந்த கொழுப்பு பற்றியும் பல குழப்ப கருத்துகள் நிலவுகிறது... கீழே இருக்கும் அட்டவணை அந்தக் குழப்பங்களைப் போக்கும் என்று எண்ணுகிறேன்.


Nutrition Facts – Peanut (வேர்கடலை) Total Calories: 567
Amount Per 100 grams

Total Fat
49 g
Saturated fat நிறைவுற்ற கொழுப்பு
7 g
Polyunsaturated fat பல்நிறைவுறா கொழுப்பு
16 g
Monounsaturated fat நிறைவுறா கொழுப்பு
24 g
Cholesterol சிதையாக் கொழுப்பு
0 mg
Sodium
18 mg
Potassium
705 mg
Total Carbohydrate
16 g
Dietary fibre நார் சத்து
9 g
Sugar
4 g
Protein
26 g


Vitamin A
0%
Vitamin C
0%
Calcium
9%
Iron
25%
Vitamin D
0%
Vitamin B-6
15%
Vitamin B-12
0%
Magnesium
42%

கூடுதல் தகவல்:
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி முன்பாக ஒரு கைப்பிடி அளவு, வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
-    பசுமை இந்தியா, ஆசிரியர் - டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்.

புதன், 21 அக்டோபர், 2015

ஆயுத பூசை

கடவுள், சாமி, கோவில் இதையெல்லாம் தாண்டி தமிழனின் விழாக்களில் எனக்கு அலாதி பிரியம் உண்டு...

உணவு முறை முதல், அந்தந்த விழாக்களில் செய்யவேண்டிய சம்பத்துகள், வாழ்வின் ஒவ்வொரு காலத்திலும், வருடம் முழுக்க, பண்பாட்டை ஒட்டி, தட்பவெப்ப சூழலை ஒட்டி, உடல்நிலைகளை ஒட்டி, உறவுகளை ஒட்டி, இப்படி எல்லாத்தையும் ஓட்டிப் பார்க்க வேண்டும்...என்ற எண்ணம் என்னை மிகவும் ஈர்த்த ஒன்று!

பிரிந்தாலும் பிரிந்து இருந்தாலும், சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கி, அதில் நினைவுகளை புகுத்தி, நெகிழ்ச்சி உண்டாக்கி, அன்பை போற்றி இருப்பான்.

திரைகடல் ஓடி சாதித்ததும் அவன்தான். கூடும் கலையும், கூட்டும் கலையும் கண்டவனும் அவன்தான்.

இன்றைய தினம் ஆயுத பூசை. வாழ்வின் ஆதாரமான பொருள், இன்பம், வீடு, இவற்றில் முதலாவதை பெற எல்லோருமே ஒரு தொழில் செய்கிறோம். எல்லாத் தொழிலிலும் ஒரு ஆயுதத்தை வைத்தே செய்வோம். பேனா முதற்கொண்டு சுத்தி, கடப்பாரை, மண்வெட்டி, ஊதுகுழல், உளி, வாகனம், கணினி, ஒலிவாங்கி (Mic), என நீண்டு கொண்டே போகும் நாம் பயன்படுத்தும் பொருட்கள்.

பொறியியல் சொல்லும் தத்துவம்... எல்லாப் பொருட்களுக்கும் ஒய்வு மற்றும் பராமரிப்பு வேண்டும்! இந்த பண்டிகையின் மூலம் "பராமரிப்பை" கட்டாயமாக்கி உள்ளார்கள்.

பராமரிப்பு அவ்வப்போது செய்யும் நபர்கள், வெறுமனே ஒய்வு கொடுத்தால் போதுமானது...

செயின்ட் கொபைன் என்கிற 'ஆடி' (கண்ணாடி) தயாரிக்கும் தொழிற்சாலையில் மண் மற்றும் சில பொருட்கள் கொண்டு அதிவெப்ப சூழலில் குழம்பாக்கி அதனை குளிர்வித்துதான் ஆடி செய்கிறார்கள். அந்த அடுப்பானது இருபது வருடத்திற்கு நிறுத்தாமல் செயல்பட வேண்டும். அதுதான் அதன் ஆயுட்காலமும் கூட.

இப்படி சில விதிவிலக்குகளும் உண்டு! எந்த விழாவாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து செய்ய வேண்டும்! எந்திரன் படத்தில் வருவதுபோல செய்யக்கூடாது! சரிதான???


செவ்வாய், 13 அக்டோபர், 2015

ப்ளீஸ் அப்பா!

"ஒரு நிமிடம் இப்படி வந்து நில்லுங்கள் அப்பா..." - மகளின் வேண்டுகோளை காதில் போட்டுக்கொண்டாலும், வீட்டிற்குள் இருக்கும் அறைக்கு செல்வதற்கே துணை தேவைப்படுகிறதே! வாழ்க்கையில் இன்னும் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இருக்குமா? என்ற எண்ணமே மேலோங்கி...



"அதெல்லாம் முடியாது... ஒம்பதாவது படிக்கிற, இன்னும் தனியா பாத்ரூம் போக முடியல..." என்று எறிந்து விழுந்தார்... ஐ.டி. ஆபீஸில் பணிபுரிந்துவிட்டு, பதினோரு மணிக்கு படுக்கைக்கு சென்றவரை, 11:30க்கு எழுப்பினால், கோபம் வரத்தானே செய்யும்...

வயதுக்கு வந்தப்பின், பெண்களுக்கு இருக்கும் உச்சபட்ச Insecure feelingகிற்கு எந்த லாஜிக்கும் பார்க்க முடியாது. ஒன்று, விதியே என்று போய் நிற்க வேண்டும்! அல்லது, "அப்பாவால முடியலம்மா..." என்று தப்பிக்க வேண்டும்! கோபப்படுதல், அவர்களின் சார்புத்தன்மையை விலக்கிவிடாது... மாறாக வேறொருவரை சாரவேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.

திங்கள், 12 அக்டோபர், 2015

கோராவின் நாத்திகம்

Gandhiji  found  that  though  Gora  loved  to  call  himself  an  atheist,  he  was  a sincere and serious-minded man. He was, what might be called, 'a man of God'. Indeed,  he  resented  being  considered  'godless',  and  insisted  in  distinguishing
between atheism and godlessness.

This  looks  puzzling  and  self-contradictory.  Gora  tries  to  overcome  the contradiction  by  saying  that  "Godlessness  is  negative;  it  merely  denies  the existence of God. Atheism is positive.... It means self-confidence and free will." It is, I believe, a meaning given to this word by Gora himself, and not easily
knowable from its structure.

Gora - Goparaju Ramchandra Rao
Atheism - நாத்திகம்.

தமிழாக்கம்:
"நாத்திகம் பேசுவதென்பது, கடவுளைப் புறக்கணிப்பதல்ல... எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதல்ல... மாறாக, நாத்திகம் என்பது நேர் சிந்தனை உடையது. மனிதன் எனும் உயிரினம், கடவுள் எனும் சிக்கலிலிருந்து வெளிவர வேண்டும்." என்று அவர் கருத்தை முன்வைக்கிறார்.

இந்தப் பதவுரையை படித்தபின், ராமானுஜர் முன்வைத்த "விஷிஷ்டத்வைதம்" பற்றி நாம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பிறப்பு முதலே "ஸ்ரீவைஷ்ணவம்" என்ற தொட்டிலில் தவழ்ந்தவர் ராமானுஜர். அவர் பிறந்த ஊரில், சரியாக 1990-2005 வரை வாழ்ந்தேன் என்ற நினைப்பே மகிழ்வைத் தருகிறது. பெருமாளே எல்லாம், என்று போதிக்கப்பட்டு, தத்துவங்களை கற்கத் துவங்கிய நாட்களில், ராமானுஜருக்கு ஏற்பட்ட, அடிப்படை சந்தேகங்களை, அதாவது, இடைச்செருகல்கள் என்று அவர் நினைத்து அவற்றைப் பற்றி எழுப்பிய கேள்விகள், அவரின் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்தது என்றால், அவர் எவ்வளவு "நாத்திகம்" பேசியிருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

எந்தவொரு கொள்கையானாலும், சமூக நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும், வேறுபாடுகள் பாராட்டக்கூடாது, அழிவைத்தரும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டும் என்று அவர் எழுப்பிய கேள்விகளும், செய்த சமத்துவ செயல்களும், அவரை மக்கள் மத்தியில் பெருமதிப்புடையவராக உயர்த்தியது.

அவரின் கொள்கைகளை "விஷிஷ்டத்வைதம்" எனும் பெயரிட்டு, பரப்ப நினைத்த வேளையே அவர் உலகை விட்டு மறைந்துவிட்டார். "இந்துமதம்" எனும் ஜீவநதியின் கிளைதான் என்று சொல்லி, பெருமாளின் கோவிலின் உள்ளேயே அவருக்கும் சிலை வைத்து சாமியாக்கி வைத்துவிட்டார்கள் சில ஈனப்பிறவிகள்.

பகுத்தறிவு பேசிய பெரியாரையும் இப்போதுள்ள மாக்கள், சிலை வைத்து, நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய இடைவெளியில், அவரையும் கடவுளாக்கி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஆண்டாண்டு காலமாக சொல்லிவந்த சொல்மட்டும் இன்னும் பச்சைப்பசேலென உயிர்ப்போடு இருக்கிறது.

"போர்க்களம் மாறலாம்... போர்கள் மாறுமா?"

எப்போதும் எதிர் சிந்தனையுள்ள இரு விஷயங்கள் இருக்கும். அவை போரிட்டுக்கொண்டே இருக்கும்!

வாழ்கையே..போர்க்களம்!!!