புதன், 9 ஜூன், 2010

இந்திய சென்சஸ் 2011, ஒரு விழிப்புணர்வு கட்டுரை!

இந்திய நாட்டில் நடப்பு ஆண்டில் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு(Census) நடத்தப்போகிறார்கள். இதில் பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுப்பு நடைபெறும்.

நாம் கவனிக்க வேண்டிய முக்கியப் பிரிவு என்னவென்றால், சாதி வாரியாக எடுக்கும் கணக்கு. இது உண்மையிலையே மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எந்த அரசும் செய்யாது. நிஜமான நோக்கம் என்னவென்றால், சாதி வாரியாக, தொகுதி வாரியாக ஓட்டுவங்கிகளை அடையாளம் காண நடக்கும் சதி. இது வெளிப்படையாக எல்லோருக்கும் (அநேகமாக!) புலப்படும்.

நீண்ட கால அடிப்படையில் அரசாங்கம் இதை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் சமீபத்திய சாதனைகளை (!!) உற்று நோக்கும் வாசகர்களுக்கு இன்னும் நிறைய எதிர்வினைகளை ஊகிக்க முடியும். முக்கியமாக அன்னை (!?!) அவர்களின் கடந்த கால வரலாறு மற்றும் அசைவுகளை தெரிந்தர்வர்களின் ஊகம் இன்னும் மோசமானதாகவே இருக்கும்.

இந்த கருத்துக்கு ஆதாரங்கள் சில:
  1. 80 வருடங்களுக்குப்பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெற எந்த ஞாயமான காரணமும் அரசிடம் இல்லை.
  2. தொடர்புடைய சுட்டி 1
  3. தொடர்புடைய சுட்டி 2
  4. இந்தியா போன்ற சமய சார்பற்ற (Secular) நாடுகளில், ஒருவர் மதம் மாறினாலும், சாதி அடையாளம் மாறாமல்தான் இருக்கிறது. எனவே சாதி என்பது அழிக்க முடியாத அடையாளம் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகள் உணர்ந்து வெகுகாலமாகிறது. அதை இன்னும் பலப்படுத்தி தற்போது இருக்கும் சாதிவாரியான கணக்கை மேலும் துல்லியமாக அறிய அரசு எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
இதைப் படித்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கணக்கெடுப்பு அதிகாரி உங்கள் வீட்டிற்கு வந்து கணக்கெடுக்கும்போது சாதி என்ன என்ற கேள்விக்கு உங்கள் உண்மையான சாதியின் பெயரை சொல்லாமல் வேறு என்ன சொன்னாலும் சரி, அது நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு (?? சற்றே) ஆரோக்யமான சமுதாயத்தை விட்டுச் செல்வதற்கு சமம்.

தேசிய உணர்வுடன்,
உதயகுமார்.