திங்கள், 18 ஜனவரி, 2016

Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்


Public Provident Fund எனும் அருமையான சேமிப்புத் திட்டம்.
*************************************
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பொதுமக்கள் எல்லோரும் விதிவிலக்கின்றி பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்டில் சேமிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும் ஒரே திட்டம் இதுதான். குறைந்தபட்சம் ₹.500 முதல் லிமிட் இருக்கும்வரை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
திருமணம் மற்றும் மேற்படிப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக இது இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பதினைத்து வருடம் லாக் பீரியட் இருக்கும் இந்த அக்கௌன்ட்டில் நிலையான ரிடர்ன்ஸ் கிடைக்கும். வருடா வருடம் நிதிநிலை தாக்கல் செய்யப்படும்போது பி.பி.எஃப்.க்கான வட்டி விகிதம் அறிவிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி, வருடத்திற்கு ஒன்னரை லட்ச ரூபாய் வரை பி.பி.எஃப்.ல் சேமிக்கலாம்.
கொசுறு:
--------------
வருடத்திற்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதை மே மாதத்தில் முடிவுசெய்து ஜூன் இறுதிக்குள் பி.பி.எஃப்.ல் மொத்தப் பணத்தையும் போடுவதால் அதிக வட்டி பெற முடியும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

அப்துல் ரஷீத்

பள்ளிகூடத்துக்கு போய் பாடம் படிக்குறது ஒரு வகை... எல்லாருக்கும் சின்ன வயசுல(!) அனேகமா அது நடந்திருக்கும்...

பள்ளிக்கூட படிப்பு ஏதோ புரிஞ்சும் புரியாமையும் ஒரு வழியா முடிஞ்சிடும். படிப்பு முடிச்ச கையோட வேலைக்கு போடா(டி)ன்னு அனுப்பிருவாங்க.

கண்ண கட்டி காட்டுல விட்டாக்கூட பரவால்ல... காய், பழம் எல்லாம் சாப்பிட்டு ஏதோ ஒரு தெசையில வாழ்க்கைய ஓட்டிரலாம்... கடல்ல விட்டா எப்படிங்க பெரியவங்களே???

"ஒலகம் தெரியாம இருக்கான் எப்படித்தான் பொழைக்கப் போறானோ??" அப்படின்னு பொலம்பிட்டு விட்டுட்டா போதுமா? ஒங்க அனுபவத்த கொஞ்சம் சொன்னா அத வச்சு பொழப்போமே!!! அப்படின்னு நெனைக்குற இளசுகளுக்குதான் பொஸ்தகம் இருக்குது...

"படிப்பே ஏறலன்னுதான் வேலைக்கு வந்தோம்... இங்க வந்ததுக்கு அப்புறமும் படிக்கனும்னா, அட போப்பா..." - இப்படி செல பேரு! அவுங்களுக்கு அனுபவம் யார் தெரியுமா?? தெனமும் பாக்குற எல்லா மனுசங்களும்தான்.

அப்துல் ரஷீத் - ஆட்டோ டிரைவர். கூடுவாஞ்சேரில வாடகை வீட்ல வாழுற, குடும்ப கடன்களை முடித்துவிட்ட, தமிழ்நாடு போக்குவரத்துள வேலை செஞ்சி ஒய்வு வாங்குன, எண்பத்து நாலு வயசுக்காரர்.

தெனமும் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற மாமரத்து பிள்ளையார் கோவில்தான் அவருக்கு சர்வ அடைக்கலம். அங்கு வந்தால் அவருக்கு எந்த நாள்லயும் எந்த நேரத்துலயும் சவாரி கெடைக்குதாம்...

இன்னைக்கு கெடைச்ச அனுபவம். - தொடரும்.