வெள்ளி, 14 மே, 2010

ஏர்போர்ட் நல்ல ஏர்போர்ட்!!!

நான் கூடுவாஞ்சேரியில் வசிப்பவன். மகேந்திரா சிடியில் வேலை. சில நாட்கள்முன்புதான் ஏர்போர்ட் பக்கம் செல்ல வேண்டி இருந்தது. ஏர்போர்ட் மேம்பாலம் மிகநேர்த்தியாக கட்டபட்டிருந்தது. ஆனால் மேம்பாலத்தின் கீழ்புறம், ஆட்டோக்கள்நிற்கும் இடம் அருகில் சென்றவுடன் என் பிரமிப்பு காற்று போன பலூன் போல்ஆனது. ஏன் என்று சிலர் யூகித்து இருப்பீர்கள். ஆட்டோ டிரைவர்கள் (இயற்கை) அவசரம் காரணமாக அங்கே ஓர் நீர்த்தொட்டி உருவாக்கி அந்த சுற்றுபுறத்தை மனம் வீச செய்துள்ளனர்.

பல வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லோரும் பார்க்கும் இடத்தில் இவ்வாறு செய்கிறோமே என்ற உணர்வே இல்லாமல் இப்படி செய்து விட்டார்கள். ஆனால் அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன். AAI என்னும் இந்திய ஏர்போர்ட் அதாரிட்டி அதிகாரிகளாவது அவர்களுக்கு முறையான ஒரு இடத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

கேள்வி என்னிடம்! விடை யாரிடம்!!

2 கருத்துகள்:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

தனி மனித ஒழுக்கம்
இல்லாமல் சமூகத்தை
குறை சொல்லி பயனில்லை
உதய குமார் ...

shortfilmindia.com சொன்னது…

:(

கேபிள் சங்கர்