செவ்வாய், 25 மே, 2010

தோழனா? தோழியா?

சமீபத்தில் ஒரு உளவியல் ரீதியான பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நெருங்கிய தோழிக்கு திருமணம் நடந்து முதல் நாள் இரவு விசேஷத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சிறிய முன்குறிப்பு: என் தோழி வீட்டில் கடைக்குட்டி. அவளுக்கு இரண்டு சகோதரிகள் (இரட்டையர்). அப்பா செக்யூரிட்டி உத்தியோகம் பார்ப்பவர். அம்மா சுய உதவிக்குழு ஒன்றில் இணைந்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

சிறிது நேரத்தில் என் தோழி (இனி ராதா என்று வைத்துக்கொள்வோம், ராதாவின் அம்மா சீதா) கண்ணீர் மல்க வார்த்தைகள் ஏதும் இன்றி சீதாவின் பக்கத்தில் நின்றாள். சீதாவுக்கு தூக்கி வாரி போட்டது. இந்த நேரம் பார்த்து இவள் இப்படி செய்கிறாளே, மாப்பிள்ளை என்ன நினைப்பார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ராதாவின் அப்பாவிடம் சொன்னார். இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.

பெட்ரூமைவிட்டு வெளியே எட்டிப்பார்த்த மாப்பிள்ளை நடப்பது என்ன என்று ஒருவாறு கணக்கு போட்டு, அமைதியாய் வெளியே வந்து ராதாவின் அப்பாவிடம் இன்றைக்கு எதுவும் வேண்டாம் என்றும், வேறு ஒரு நல்ல நாள் பார்க்கச் சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.

பிரச்சினை இதோடு முடிந்து விடுமா?

சீதா ராதாவை சமாதானப்படுத்தி அனுப்பிவைக்க முயற்சி செய்தார். பலனில்லை. பயம் அப்பிக்கொண்ட முகத்தோடு ராதாவின் மனநிலை சரியாக இல்லை என்பது தெரிய வந்தது.

பொதுவாக, நாம் கேள்விப்படும் விஷயம் என்னவென்றால் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கும் அனாலும், அந்த தருணம் வரும்போது ஒருவகையாக சமாளித்து விடுவார்கள். அனால் ராதாவின் கதை முற்றிலும் வேறு!

விஷயத்தை நான் ஆராய்ந்ததில், எனக்கு புலப்பட்ட விஷயம், ராதாவுக்கு நல்ல தோழி ஒருத்தி இல்லை என்பது.

நம் சமுதாயத்தில் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆணுக்கு கிடைக்கும் வாய்ப்பை விட பெண்ணுக்கு கிடைப்பது குறைவே. அதேபோல் இந்த விஷயத்தை ஒரு பெண்ணிடம் அவளின் தோழன் வெளிப்படையாய் பேசும் நிலை இல்லை. அம்மாதான் தோழியாக இருந்து இவ்விஷயங்களை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் குடும்ப சூழ்நிலை அவர்கள் பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது!

தவறு யார்மீதும் இல்லை. என்றாலும் பிரச்சினைக்கு பொறுப்பேற்று யார் இதை தீர்த்து வைப்பது.

என் தோழிக்கு உங்களால் முடிந்த அறிவுரை அல்லது ஆலோசனையை எதிர்பார்த்து இந்த பதிவு!... இதுபோன்ற மற்ற தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் இது காணிக்கை!

அன்புடன்,
உதயகுமார்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளை தமிளிஷ் - ல் இணைக்கவில்லையா?

நன்றாக எழுதுகிறீர்கள் ...

Udayakumar Sree சொன்னது…

நன்றி செந்தில். எவ்வாறு தமளிஷில் இணைப்பது என்று தெரியவில்லை!