சனி, 2 அக்டோபர், 2010

மனம் ஒரு தோட்டம்

முதலில் கொஞ்சம் தாவரங்களின் வரலாறு. தாவரங்களின் வகைகள் சுமார் 4 லட்சம். அத்தனையும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் பெருவாரியான பிரிவினைகளை நாம் அறிவியல் பாடங்கள் மூலம் அறிந்துள்ளோம். மலர்ச்செடிகள், காய் மற்றும் கனி தரும் செடிகள், பலனே அல்லாத செடிகள். இன்னொரு வகை உள்ளது. அது உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் சில தாவரங்கள், முட்செடி போன்று.

முட்செடிகளை வெட்டி எரி(றி)யுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை நான் பார்க்க நேர்ந்தது. ஊரெல்லாம் உள்ள முட்செடிகளை வெட்டுவது மிக சுலபம். ஒரு சின்ன அறிவிப்பு போதும். ஆனால் நம் மனம் என்னும் தோட்டத்தில் பல முட்செடிகளை வளர்த்து வருகிறோம், நமக்கே தெரியாமல். தெரியாமல் வளர்த்தது நம் தவறில்லை என்றாலும், முற்றிலும் வளர்ந்து நம்மையே அழிக்கும் வரை நாம் அதை அறியாமலே இருப்பதுதான் மிகக்கொடியது.

அந்த முட்கள் வளரும்போது நம்மிடம் சில மாற்றங்கள் தென்படும். கோபம், வெறுப்பு, பொறாமை, தலைவலி, வருத்தம், சொந்தம் மற்றும் நட்பில் விரிசல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

எல்லாம் சேர்ந்து தென்படுமேயானால் உங்களை யார் காப்பாற்றுவது?

மனத்தோட்டத்தில் முட்களை வெட்டிவிட்டு மலர்ச்செடிகளை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

வற்புறுத்தியோ அதிகாரம் செய்தோ எதையும் சாதிக்க முடியாது. வேறு எந்த குறுக்கு வழியிலும் முடியாது. இறைநம்பிக்கையும் வழிபாடும் மட்டுமே நல்வாழ்க்கைக்கு வழி செய்யும். ஆன்மிகம் என்பது இவ்வாறு உருவானதுதான்.
வழிபாடும் தியானமும் முட்செடிகளை களைந்து மலர்ச்செடிகளை வளர்க்க உதவும்.
இன்று மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டிருக்கும். வழிபடுங்கள். வாழுங்கள்.

1 கருத்து:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

வழிபாடும் தியானமும் முட்செடிகளை களைந்து மலர்ச்செடிகளை வளர்க்க உதவும்.

--------------------
நல்ல கருத்து..