செவ்வாய், 25 மே, 2010
தோழனா? தோழியா?
சிறிய முன்குறிப்பு: என் தோழி வீட்டில் கடைக்குட்டி. அவளுக்கு இரண்டு சகோதரிகள் (இரட்டையர்). அப்பா செக்யூரிட்டி உத்தியோகம் பார்ப்பவர். அம்மா சுய உதவிக்குழு ஒன்றில் இணைந்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
சிறிது நேரத்தில் என் தோழி (இனி ராதா என்று வைத்துக்கொள்வோம், ராதாவின் அம்மா சீதா) கண்ணீர் மல்க வார்த்தைகள் ஏதும் இன்றி சீதாவின் பக்கத்தில் நின்றாள். சீதாவுக்கு தூக்கி வாரி போட்டது. இந்த நேரம் பார்த்து இவள் இப்படி செய்கிறாளே, மாப்பிள்ளை என்ன நினைப்பார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ராதாவின் அப்பாவிடம் சொன்னார். இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.
பெட்ரூமைவிட்டு வெளியே எட்டிப்பார்த்த மாப்பிள்ளை நடப்பது என்ன என்று ஒருவாறு கணக்கு போட்டு, அமைதியாய் வெளியே வந்து ராதாவின் அப்பாவிடம் இன்றைக்கு எதுவும் வேண்டாம் என்றும், வேறு ஒரு நல்ல நாள் பார்க்கச் சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.
பிரச்சினை இதோடு முடிந்து விடுமா?
சீதா ராதாவை சமாதானப்படுத்தி அனுப்பிவைக்க முயற்சி செய்தார். பலனில்லை. பயம் அப்பிக்கொண்ட முகத்தோடு ராதாவின் மனநிலை சரியாக இல்லை என்பது தெரிய வந்தது.
பொதுவாக, நாம் கேள்விப்படும் விஷயம் என்னவென்றால் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கும் அனாலும், அந்த தருணம் வரும்போது ஒருவகையாக சமாளித்து விடுவார்கள். அனால் ராதாவின் கதை முற்றிலும் வேறு!
விஷயத்தை நான் ஆராய்ந்ததில், எனக்கு புலப்பட்ட விஷயம், ராதாவுக்கு நல்ல தோழி ஒருத்தி இல்லை என்பது.
நம் சமுதாயத்தில் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆணுக்கு கிடைக்கும் வாய்ப்பை விட பெண்ணுக்கு கிடைப்பது குறைவே. அதேபோல் இந்த விஷயத்தை ஒரு பெண்ணிடம் அவளின் தோழன் வெளிப்படையாய் பேசும் நிலை இல்லை. அம்மாதான் தோழியாக இருந்து இவ்விஷயங்களை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் குடும்ப சூழ்நிலை அவர்கள் பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது!
தவறு யார்மீதும் இல்லை. என்றாலும் பிரச்சினைக்கு பொறுப்பேற்று யார் இதை தீர்த்து வைப்பது.
என் தோழிக்கு உங்களால் முடிந்த அறிவுரை அல்லது ஆலோசனையை எதிர்பார்த்து இந்த பதிவு!... இதுபோன்ற மற்ற தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் இது காணிக்கை!
அன்புடன்,
உதயகுமார்.
வெள்ளி, 14 மே, 2010
ஏர்போர்ட் நல்ல ஏர்போர்ட்!!!
பல வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லோரும் பார்க்கும் இடத்தில் இவ்வாறு செய்கிறோமே என்ற உணர்வே இல்லாமல் இப்படி செய்து விட்டார்கள். ஆனால் அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன். AAI என்னும் இந்திய ஏர்போர்ட் அதாரிட்டி அதிகாரிகளாவது அவர்களுக்கு முறையான ஒரு இடத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.
கேள்வி என்னிடம்! விடை யாரிடம்!!
வியாழன், 31 டிசம்பர், 2009
2009ம் ஆண்டின் கடைசி பதிவு...
இதுவரை நான் படித்த வார/மாத இதழ்கள் எல்லாவற்றிலும், பொதுவான செய்திகள், தகவல்கள் அல்லது அலசல்கள் இடம்பெற்றிருக்கும். அவை படித்தபின் அநேகமாக மறந்துவிடும். அனால், புதிய தலைமுறை எழுத்துக்கள் ஒவ்வொன்றும், மனதின் எல்லை வரை சென்று, தன் தனி முத்திரையை பதிக்கிறது. இந்த இதழின் பொறுப்பாளர் மிகவும் கவனத்துடன் எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் வடிகட்டி, ரத்தினங்களை மட்டும் இதழில் சேர்த்து பயனுள்ள அழகான வழியில் கொடுத்திருப்பது என் போன்றோருக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது.
நல்ல இதழ்களை தேடி நான் மிகவும் அலைந்திருக்கிறேன். எனக்கு அதன் வலி தெரியும். என்னைப்பொருத்தவரை இந்த இதழ் ஒரு விடிவெள்ளி. ஒவ்வொரு பக்கமும் அறிய தகவல்களையும் கொடுத்து, படிக்கும் எல்லா தரப்பு வாசகர்களையும் பயன்பெறவைக்கும் முயற்சி பாராட்டக்கூடியது. மேலும் ஆரம்பித்த சில வாரங்களிலேயே அதிக வாசகர்களை கொண்ட இதழ் இது என்ற பெருமையும் உண்டு.
2010 ம் ஆண்டு மேலும் பல சாதனைகளை படைத்து புதிய தலைமுறையை உருவாக்கிட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
அன்பு வாசகன்
உதயகுமார் ஸ்ரீ.
செவ்வாய், 27 அக்டோபர், 2009
லினக்ஸ் பற்றிய தமிழ் வலைப்பூக்கள்
http://kumarlinux.blogspot.com/
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com
http://ubuntuintamil.blogspot.com/
http://fedoraintamil.blogspot.com/
http://blog.ravidreams.net/2007/04/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html
http://tamilgnu.blogspot.com
http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t1096.html
http://suryakannan.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
http://www.getittamil.com/index.php?view=article&catid=60%3A2008-11-11-00-36-52&id=128%3A-linux-distribution&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=70
http://www.hisubash.com/tblog/?p=387
சுட்டிகள் வேலை செய்யாவிடில்: udayakumar.sree@gmail.com என்ற முகவரிக்கு தெரியபடுத்தவும். நன்றி.
புதன், 19 ஆகஸ்ட், 2009
Colors
So, if you want to have a relaxing dinning room and you are staying in cool climates, better paint your dining room with off-white, tan, pale gold or beige color. And, if you are staying in a warmer climate, better paint your it with cool blue or green color. But, if you want your family’s appetite especially kids’ appetite to be stimulated better paint it with warm colors like yellow, orange or red.
If you want to have a good night sleep or an optimal sleeping conditions, pale pink, mauve and lavender colors are great for cooler climates. Pale blue, pale green and beige are good relaxing colors for those with hot climates. If you are suffering from lack of sleep, why not repaint your room?
Color your rooms to make it more homey to the occupants than just an ordinary room because color could greatly affect one’s behavior.
வெள்ளி, 19 ஜூன், 2009
நான் கடவுள்
“எதை எப்படி ஏத்துக்கனும்னு நெறைய பேருக்கு தெரியல / சொல்லி கொடுக்கல”
கண்ணுக்கு தெரியுற எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும்னு ஆசைபட்டா நம்ம வாழ்நாள் போதாது. பல விஷயங்களை அப்படியே ஏத்துக்கணும். சில விஷயங்களை ஆராய்ச்சி பண்ணி அப்புறம் ஏத்துக்கணும்.
“எதை எப்படி ஏத்துக்கனும்னு நெறைய பேருக்கு தெரியல / சொல்லி கொடுக்கல”
எந்த விஷயம் காலம் செல்ல செல்ல மாறுமோ, இல்ல, உன்கிட்ட வரும்போது மாறுமோ, அதை ஆராய்ச்சி பண்ணி அப்புறம் ஏத்துக்கணும். எந்த விஷயம் மாறாதோ இல்ல நீ மாற கூடாதுன்னு நெனகிறியோ அதை அப்படியே ஏத்துக்கணும்.
சில விஷயங்கள் நடக்கறத பாத்து நமக்கு நம்பிக்கை வரும். இது இயற்கையா நடக்கறது. மொதல்ல இது உண்மையா இருந்தாலும், போகப்போக பொய்யா, இல்ல உண்மையின் வேறு பரிமாணமா மாற வாய்ப்பு இருக்கு.
சில விஷயங்கல நம்பினா அது நாம நம்பின மாதிரியே நடக்கும். இது உளவியல் ரீதியா நடக்கறது. மொதல்ல இது பொய்யா கூட இருக்கலாம். ஆனா கட்டாயம் உண்மையா மாறும்.
அதனால, எத நம்பனும், எத நம்பிக்கையால மாத்தணும்னு தெரிஞ்சுகிட்டா, நாம நெனைக்கிற எல்லா விஷயமும், நாம நெனைக்கிற மாதிரியே நடக்கும்.
தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு. "நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்."
தெய்வம் என்ன நினைக்கும்னு நாம தெரிஞ்சுகிட்டா, நம்மளவிட அதிஷ்டசாலி, யாரும் இருக்க முடியாது.
ஆனா, தெய்வத்த புரிஞ்சுக்க, என்ன செய்றது?
§ மொதல்ல நாம யாருன்னு நாம தெரிஞ்சுக்கணும்
o சின்ன வயசிலேர்ந்து எப்படி வளர்ந்தோம், யாரு சோறு ஊட்டினா, யார் குளிபாட்னா, யாரு எத சொல்லி குடுத்தா, எல்லாத்தையும் மனசுக்குள்ள அசை போடணும்.
o தனிமையா ஒக்காந்து யோசிக்கணும்.
o நம்மோட ஆசைகள் என்ன, பழக்க வழக்கம் என்ன, புடிச்ச விஷயம் என்ன, அது ஏன் புடிக்குது, புடிக்காத விஷயம் என்ன, ஏன் புடிக்கல, எல்லாமே தெரிஞ்சுக்கணும்.
o இந்த உலகத்துல நமக்கு என்னென்ன கெடச்சிருக்கு, எல்லாருக்கும் அது கெடச்சிருக்கா? நமக்கு என்ன கெடைக்கல? ஏன் கெடைக்கல? மத்தவங்களுக்கு அது கெடச்சிருக்கா? இந்த எல்லா கேள்விக்கும் பதில் தெரிஞ்சுக்கணும்.
o நம்ம சமுதாயத்துல ஆண் எப்படி, பெண் எப்படி, அப்பா எப்படி அண்ணன் எப்படி, தங்கச்சி எப்படி, சித்தப்பா எப்படி, மாமா எப்படி...எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும்.
§ நிதானம் ரொம்ப முக்கியம் - உணர்ச்சி வசப்படாம எந்த ஒரு விஷயத்தையும் பார்த்தா, அதோட உண்மையான உருவத்த பாக்க முடியும். உண்மையான உருவத்த பாக்கும்போது அந்த விஷயத்த பத்தின புரிதல் நல்லா இருக்கும். உனக்குன்னு ஒரு கற்பனையோ இல்ல, ஏற்கெனவே நடந்த மாதிரிதான் நடக்குங்கிற நெனைப்போ இருக்கவே கூடாது.
§ யார் எத சொன்னாலும், கூர்மையா கவனிக்கணும் - நாம யாருன்னு நமக்கு தெரியுற மாதிரி, நம்ம கூட இருக்குற எல்லாரையும் தெரிஞ்சுக்கணும். மத்தவங்க பேசும்போது, வெறும் வாயளவுல பேசுறாங்களா இல்ல மனசுலேர்ந்து பேசுறாங்களான்னு மொதல்ல தெரிஞ்சுக்கணும். அப்புறம், அவுங்க சொல்ற விஷயம் நடக்க கூடியதா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும். இப்படி கூர்மையா எல்லாத்தையும் நாம கவனிக்கறப்ப நம்ம மனசு ஒரு தெளிவுக்கு வரும். மனசு தெளிவா இருந்தா எல்லாமே சாத்தியம்தான்.
§ யாராவது நம்மகிட்ட கேள்வி கேட்டா, ஒரு நிமிஷம் யோசிச்சு பதில் சொல்லணும்
o ஒருத்தர் கேள்வி கேட்டா, மொதல்ல நாம பதில் சொல்லனுமான்னு யோசிக்கணும்.
o மூணாவது மனுஷன் கேள்வி கேட்டா, இவனுக்கு பதில் நாம ஏன் சொல்லனும்னு யோசிச்சு பாக்கணும். பதில் சொல்லலாம்னு தோனுச்சுனா சொல்லலாம். இல்லனா நாம நம்ம வேலைய பாக்கலாம்.
o சொந்தகாரங்க, நமக்கு நெருக்கமானவங்க கேட்டா, எந்த மூட்-ல அவுங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு பதில் சொல்லணும். சில நேரம், கோவத்துல கேள்வி கேக்கும்போது பதில் சொல்றத விட அந்த பதில செயல்ல செய்யறது நல்லது. பதில் சொல்லித்தான் ஆகனும்னா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லணும். நாம தப்பு செஞ்சிருந்தா உடனே மன்னிப்பு கேக்கணும். நெருக்கமானவங்க கிட்ட மன்னிப்பு கேட்டா எந்த தப்பும் இல்ல. அத பத்தி பெருசா feel பண்ணவும் தேவையில்ல.
§ மனச எப்பவும் ரிலாக்சா வெச்சுக்கணும் - அதிக உலக அறிவும், மத்தவங்கள பத்தின புரிதலும், இருந்தா நாம கோவப்படவே மாட்டோம். கோவப்படாம இருந்தா மனசு எப்பவும் ரிலாக்சாதான் இருக்கும்.
மேல இருக்குற எல்லா கேள்விக்கும் பதில் உனக்கு திருப்தியா இருந்தா எத பத்தியும் கவலை படாம எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம உன் மனசு சொல்ற மாதிரி நீ எப்பவும் நடந்துக்கலாம்.
வெள்ளி, 29 மே, 2009
Grandma's Touch (பாட்டி வைத்தியம்)
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்