திங்கள், 12 அக்டோபர், 2015

கோராவின் நாத்திகம்

Gandhiji  found  that  though  Gora  loved  to  call  himself  an  atheist,  he  was  a sincere and serious-minded man. He was, what might be called, 'a man of God'. Indeed,  he  resented  being  considered  'godless',  and  insisted  in  distinguishing
between atheism and godlessness.

This  looks  puzzling  and  self-contradictory.  Gora  tries  to  overcome  the contradiction  by  saying  that  "Godlessness  is  negative;  it  merely  denies  the existence of God. Atheism is positive.... It means self-confidence and free will." It is, I believe, a meaning given to this word by Gora himself, and not easily
knowable from its structure.

Gora - Goparaju Ramchandra Rao
Atheism - நாத்திகம்.

தமிழாக்கம்:
"நாத்திகம் பேசுவதென்பது, கடவுளைப் புறக்கணிப்பதல்ல... எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதல்ல... மாறாக, நாத்திகம் என்பது நேர் சிந்தனை உடையது. மனிதன் எனும் உயிரினம், கடவுள் எனும் சிக்கலிலிருந்து வெளிவர வேண்டும்." என்று அவர் கருத்தை முன்வைக்கிறார்.

இந்தப் பதவுரையை படித்தபின், ராமானுஜர் முன்வைத்த "விஷிஷ்டத்வைதம்" பற்றி நாம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பிறப்பு முதலே "ஸ்ரீவைஷ்ணவம்" என்ற தொட்டிலில் தவழ்ந்தவர் ராமானுஜர். அவர் பிறந்த ஊரில், சரியாக 1990-2005 வரை வாழ்ந்தேன் என்ற நினைப்பே மகிழ்வைத் தருகிறது. பெருமாளே எல்லாம், என்று போதிக்கப்பட்டு, தத்துவங்களை கற்கத் துவங்கிய நாட்களில், ராமானுஜருக்கு ஏற்பட்ட, அடிப்படை சந்தேகங்களை, அதாவது, இடைச்செருகல்கள் என்று அவர் நினைத்து அவற்றைப் பற்றி எழுப்பிய கேள்விகள், அவரின் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்தது என்றால், அவர் எவ்வளவு "நாத்திகம்" பேசியிருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

எந்தவொரு கொள்கையானாலும், சமூக நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும், வேறுபாடுகள் பாராட்டக்கூடாது, அழிவைத்தரும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டும் என்று அவர் எழுப்பிய கேள்விகளும், செய்த சமத்துவ செயல்களும், அவரை மக்கள் மத்தியில் பெருமதிப்புடையவராக உயர்த்தியது.

அவரின் கொள்கைகளை "விஷிஷ்டத்வைதம்" எனும் பெயரிட்டு, பரப்ப நினைத்த வேளையே அவர் உலகை விட்டு மறைந்துவிட்டார். "இந்துமதம்" எனும் ஜீவநதியின் கிளைதான் என்று சொல்லி, பெருமாளின் கோவிலின் உள்ளேயே அவருக்கும் சிலை வைத்து சாமியாக்கி வைத்துவிட்டார்கள் சில ஈனப்பிறவிகள்.

பகுத்தறிவு பேசிய பெரியாரையும் இப்போதுள்ள மாக்கள், சிலை வைத்து, நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய இடைவெளியில், அவரையும் கடவுளாக்கி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஆண்டாண்டு காலமாக சொல்லிவந்த சொல்மட்டும் இன்னும் பச்சைப்பசேலென உயிர்ப்போடு இருக்கிறது.

"போர்க்களம் மாறலாம்... போர்கள் மாறுமா?"

எப்போதும் எதிர் சிந்தனையுள்ள இரு விஷயங்கள் இருக்கும். அவை போரிட்டுக்கொண்டே இருக்கும்!

வாழ்கையே..போர்க்களம்!!!

கருத்துகள் இல்லை: